Showing posts with label Thirukolur ammal. Show all posts
Showing posts with label Thirukolur ammal. Show all posts

May 23, 2018

Thirukolur Penpillai Rahasyam-81 (Final Word)

துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே
சிதம்பரம் அருகே உள்ள திருவஹீந்திரபுரத்தில் வில்லிபுத்தூர் பகவர் என்பவர் வசித்து வந்தார். பகவர் அந்தணரோ சந்நியாசியோ அல்ல. ஆனாலும் ஆற்றில் குளிக்கச் செல்லும் போது, எப்போதும் மற்றவர்கள் குளிக்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்குச் சென்று தான் குளிப்பார். ஒருமுறை அந்தணர்கள் அவரிடம், “நீங்கள் ஏன் நாங்கள் குளிக்கும் துறையில் குளிப்பதில்லை?" என்று கேட்டனர்.

பகவர், "நான் வைஷ்ணவன். ராமானுஜரைப் பின்பற்றுபவன். நாங்கள் நித்ய அனுஷ்டானத்தை ஸ்ரீமன் நாராயணனுக்குச் செய்கிறோம். ஆனால், நீங்கள் வர்ணாஸ்ரமத்தைப் பின் பற்றுபவர்கள். இவை இரண்டும் ஒன்று சேராது. ஆகவேதான் நான் வேறு துறைக்கு செல்கிறேன்." என்றார்.

திருக்கோளூர் அம்மாள், “பகவரைப்போல் வைணவ நம்பிக்கையில் வேறு துறை செய்தேனோ?”, என்று வினவுகிறார்.
========********========
thuRai vERu seydhEnO pagavaraip pOlE
In Thiruvanthipuram, near Chidhambaram, once there lived a Srivaishnava called Villiputhur Bagavar. Bagavar was neither a Brahmin who understood the true nature of the soul or was a saint but he followed Swami Ramanuja’s practices and was an ardent devotee of Lord Vishnu. As performing Sandhyavandanam and other karmas either on the river banks or in small ponds is considered superior, Bagavar too will go to the banks of the river.

But, whenever he goes to the river to perform his daily anushatanam, he would always go to a different part of the river and not to the place where most of the Brahmins would go. One day the confused Brahmins enquired Villiputhurar as to why he is not joining them in doing sandhyavandanam.

Bagavar replied "We are followers of Swami Ramanuja. We perform these nityanushatanam only as a service to Sriman Narayana. We do not expect anything in return. You are brahmins who follow Varnashrama Dharma. You perform the nityanushtanams as part of your varna (varna i.e., only because you all are Brahmin). Therefore, the two of us cannot mix".


Thirukkolur Ammal is asking "Did I understand the greatness of service and separate myself from others?"


========********========

May 22, 2018

Thirukolur Penpillai Rahasyam-78

வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே

இராமானுசரின் முதன்மை சீடரான கூரத்தாழ்வாரின் மகனாகப் பிறந்தவர் பராசர பட்டர்.

நான்கு வயது சிறுவனாக இருக்கும் பொழுது, ஒரு நாள், காவிரிக்கரையில் விளையாடிக்கொண்டிருந்த பராசரன், ஸர்வக்ஞ பட்டர் என்ற முதிர்ந்த வைணவப் பெரியவரொருவர் பல்லக்கில் ஊர்வலமாகப் போய்க் கொண்டிருப்பதைக் கண்டார். உடன் வந்த அவரின் சீடர்கள், அவருடைய புகழைப் பாடி வந்தார்கள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பராசர பட்டர், ராமானுஜரும், கூரத்தாழ்வாரும், முதலியாண்டாரும், எம்பாரும் வசிக்கும் ஊரில், இப்படி தற்புகழ்ச்சியுடன் ஒருவர் வருவதை விரும்பவில்லை.
கையில் ஒரு பிடி மணலை எடுத்துக்கொண்டு, பல்லக்கினை நிறுத்தி, சர்வக்ஞரிடம், “நீங்கள் திறமைசாலி எனில், என் கையில் உள்ள மண் எவ்வளவு எனக் கூற முடியுமா?” என்றார்.
“மண் கோடிக்கணக்கில் இருக்கும். எவ்வளவு மணல் உள்ளது என்பதை எப்படி சொல்ல முடியும்?”, என்று திகைத்த ஸர்வக்ஞ பட்டர் வினவ, சற்றும் தாமதிக்காத பராசர பட்டர், “கைப்பிடி மண்” என்று தன் கேள்விக்கான பதிலைக் கூறினார்.
சிறுவனின் திறமையைக் கண்டு  வியந்த சர்வக்ஞர், அந்தக் குழந்தையை, “யார் நீ?” என வினவ, பராசர பட்டர், தான் கூரத்தாழ்வாரின் மகன் எனக் கூறினார். குழந்தையை தன் பல்லக்கில் ஏற்றி வந்து கூரத்தாழ்வார் வீட்டில் கொண்டு வந்து விட்டார், ஸர்வக்ஞ பட்டர்.

பின்னாளில், பராசர பட்டர் வளர்ந்ததும், ஸ்ரீராமானுஜரால் தெரிந்தெடுக்கப்பட்டு, அவர் காலத்திலேயே வைணவ ஆச்சாரியராக நியமிக்கப்பட்டார். ராமானுஜரின் அந்திம காலத்தில் ராமானுஜர், பராசரரை அழைத்து, திருநாராயணபுரம் சென்று, அங்கு வேதாந்தி என்பவரை வாதத்தில் வென்று வருமாறுக் கூறினார். பட்டரும் திருநாராயணபுரம் சென்று, வேதாந்தியை வாதத்திறமையால் வென்று அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வந்தார். அவருக்கு நன்ஜீயர் எனப் பெயரிட்டு, வைஷ்ணவ சம்பிரதாயத்தை கடைபிடிக்கவும் வைத்தார்.

திருக்கோளூர் அம்மாள், “பட்டரைப் போல் தனது வாதத் திறமையால் பிறரை வென்று, ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிலைநாட்டினேனா?”, என்று வினவுகிறார்.

=======********========
vAkkinAl venREnO battaraip pOlE

Parasara Bhattar was the son of Koorathazhwan. Once, in his childhood days, while he was playing in the banks of river Cauvery with his friends, he saw a procession in which Sarvagna Bhattar was being carried in a palanquin by his disciples. The disciples were praising Sarvagna Battar out aloud as they went along. On hearing the praises by the disciples, Parasara Bhattar was upset that in a town where notable scholars like Ramanuja, Koorathazhwan, Mudhaliyandan and Embar are residing, such a procession was taking place. So he decided to test Sarvagna Battar.

He went to the procession and stopped it. Seeing Parasara Bhattar, Sarvagna Bhattar came out of his palanquin. Parasara Bhattar, holding some sand from the river in his hand, challenged Sarvagna Bhattar to give him a count of the sand. Stunned, Sarvagna Bhattar replied, “How can you count sand?”

Parasara Bhattar replied instantly, "I can! This is a fistful of sand. You cannot even say this much and yet you go around with people crying out your praises."

Sarvagna Bhattar was amazed by this child's prowess. He then enquired about him and found out that he was the son of Koorathazhwan. He exclaimed, "Will the off-spring of that which flies just crawl?", and carried Parasara Bhattar in his palanquin to his home.

Thirukkolur Ammal asks, "Did I win over opponents with my oratory skills like Parasara Bhattar?"

May 20, 2018

Thirukolur Penpillai Rahasyam-75


 யான் சிறியேன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே

பெரிய திருமலை நம்பி, திருமலையில் அவதரித்தவர், ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஸ்ரீசைல பூர்ணர் என்ற திருநாமமும் இவருக்கு உண்டு. ராமானுஜரின் தாய்மாமனான இவரிடம், ஆளவந்தார், ராமானுஜருக்கு ராமாயணத்தை கற்றுக்கொடுக்கும் பொறுப்பினை நியமனம் செய்தார். ராமானுஜருக்கு இளையாழ்வார் எனும் இயற்பெயரை சூட்டிய பெரிய திருமலை நம்பி, திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் முதன்மையானவராக கருதப்பட்டவர். திருவேங்கடமுடையானுக்கு நித்ய கைங்கர்யபரராக இருந்து சேவை புரிந்த திருமலை நம்பி, தினமும் திருவேங்கடமுடையானுக்காக ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார்.

ஒரு சமயம், ராமானுஜர், வேங்கடவனைத் தரிசிக்க, திருப்பதிக்கு எழுந்தருளினார். பெரிய திருமலை நம்பியோ அந்நேரம் திருமலையில் இருந்தார். ராமானுஜரின் வருகையை அறிந்த பெரிய திருமலைநம்பி, பெருமாளின் தீர்த்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு, ராமானுஜரை வரவேற்க, அவரே மலை இறங்கி சென்றார். தனது ஆச்சார்யான் என்ற முறையிலும், முதியவர் என்ற முறையிலும், ராமானுஜர் அவரிடம், ‘‘அடியேன் போன்ற சிறியோனை வரவேற்க தாங்களே வர வேண்டுமா? யாரேனும் தாழ்ந்தவர் இல்லயோ?’’ என்றார்.

திருமலை நம்பி, பெருந்தன்மையுடன், ‘‘ராமானுஜா! திருமலையில் நான்கு வீதிகளிலும் தேடினேன்; என்னைவிடச் சிறியவர் எவரும் கிடைக்கவில்லை! அதனால் நானே கொண்டுவந்தேன்.’’ என்று பதிலளித்தார். நம்பியின் தன்னடகத்தைக் கண்ட எம்பெருமானார் பெரிதும் வியந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “ஸ்ரீவைணவ கோட்பாடுகளை பாராட்டி, அதன் வழி வாழ்ந்து, என்னை சிறியன் என்றேனா?, என்று வினவுகிறார்.
========********========

yAn siRiyEn enREnO thirumalai nambiyaip pOlE


Periya Thirumalai Nambi, also known as Srisaila Poornar, was one of the chief disciples of Alavandhar. Aavandhar gave Thirumalai Nambi, the responsibility of teaching Ramayanam to Ramanujar. Thirumalai Nambi was not only Ramanuja’s acharya but also his maternal uncle. It was Thirumalai Nambi who bestowed the name “Ilayazhwar” to Ramanuja when he was born. Thirumalai Nambi resided in Thirumala and he was the daily servitor to the Lord of Thirumala, in bringing the holy water from Akashganga (a waterfall in Thirumala) for the Lord.  

Thirumalai Nambi who resides in Tripathi, used to fetch water from Akashganga, climb the hill and reach Thirumala, perform his service to the Lord in the morning  (Theertha Kainkaryam) and would get down to Tripathi to teach Ramayan to Sri Ramanujar. Ramanuja stayed in Tripathi and learnt Ramayan from Thirumalai Nambi for a year.

When Ramanuja came to Thirumala, Ramanuja was hesitant to place his feet on the hills as it is Adisesha himself who was present in the form of the hills. Meanwhile, hearing that Ramanuja is in Tripathi, Thirumalai Nambi came down with the divine thulasi water and Prasadhams from the temple and welcomed him. Thirumalai Nambi, on hearing Ramanuja’s hesitant words, replied-“Ramanuja, please climb the hill considering it as bhagavat kainkaryam. Adisesha will be more than happy to get the bhagavata sripada sparsam (divine touch of devotees’ divine feet).”

Ramanuja seeing his old aged uncle Thirumalai Nambi running fast towards him, replied with respect and care, "For the sake of this small person, do you have to run and come this far? You could have sent the message and the prasadhams with someone younger. Why do you have to strain yourself?"

Thirumalai Nambi replied, "I too thought of doing the same and searched all around the Thirumala hills, but I could not find anyone younger than me (in terms of knowledge)".

Humbleness and complete surrender is considered as the prime quality in Srivaishnavism. Every Srivaishnava considers himself as the lowest person when meeting another Srivaishnava. Azhwar too calls himself "sIlamillA siRiyan".

Thirukkolur Ammal is asking, "Did I show the Srivaishnava quality like Thirumalai Nambi?”

May 15, 2018

Thirukolur Penpillai Rahasyam-71

 சூளுறவு கொண்டேனோ கோட்டியூராரைப் போலே 


சூள்என்றால், சபதம் அல்லது ஆணை என்று பொருள். 

திருக்கோட்டியூர் நம்பி, ஆளவந்தாரின் முதன்மை சீடர்களுள் ஒருவர். ஆளவந்தார், திருக்கோட்டியூர் நம்பியிடம் , தனக்கு பின்னர் மடத்தையும் சமயத்தையும் காக்க வரும் இராமானுஜருக்கு எட்டெழுத்து மந்திரத்தை உபதேசிக்க அறிவுறுத்தியிருந்தார். ஆயினும் தகுதியற்றவர்க்கு இதைக் கற்பிக்ககூடாது எனவும் கூறியிருந்தார் ஆளவந்தார். எனவே இவரிடம் இராமானுஜர் எட்டெழுத்து மந்திரத்தின் பொருளைக் கற்க வரும் பொழுது பதினெட்டு முறைகள் மறுத்து உடையவரின் தகுதியை சோதித்தப் பின்னரே கற்பித்தார். 

திருக்கோட்டியூர் நம்பிகள், திருவெட்டெழுத்து மந்திரம் பரம ரகசியம் என்றும், எவருக்கும் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் உபதேசத்தருளினார். ஆனால் உபதேசம் பெற்றவுடன் திருக்கோட்டியூர் கோவில் கோபுரத்தின் மேலேறி,  அனைவருக்கும் கேட்டு உய்யும்படி எல்லோருக்கும் உபதேசம் செய்தார் இராமானுஜர். இதனால் மிகுந்த கோபமுற்ற திருக்கோட்டியூர் நம்பி இரகசிய மந்திரத்தை இப்படி யாவருக்கும் சொல்வது குருவின் சொல்லுக்கு துரோகமிழைப்பதாகும் என்றும் இதற்கு நரகம் புக நேரிடும் என்றும் கடிந்துக்கொண்டார்.

இராமானுஜர், “திருவெட்டெழுத்தின் பயனைப் பலர் எய்தும் பொருட்டுத் தான் ஒருவன் நரகம் செல்வது உகந்தது”, என்றார். இந்த பதிலைக் கேட்ட திருக்கோட்டியூர் நம்பி, அரங்கனின் கருணையையும் இவரின் கருணை மிஞ்சிடக்கண்டு இவரே எம்பெருமானார் என்று மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்துக்கொண்டார்.

திருக்கோட்டியூர் நம்பி மறைபொருளை தகுதி அறிந்து உரைக்க வேண்டும் என்று உறுதி கொண்டிருந்தார். ராமானுஜர் திருக்கோட்டியூராரிடம் மறைபொருளை எப்படியும் பெறுவது என்று சூளுரைத்து, பதினெட்டு முறை முயன்று பெற்றார். இருவரும் சூள் உரைத்து ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டனர்.

திருக்கோளூர் அம்மாள், “திருக்கோட்டியூரார் போல் உறுதியுடன்  உபதேசித்தேனா அல்லது உபதேசம் தான் பெற்றேனா?”, என்கிறார்.
========********========

sULuRavu koNdEnO kOttiyUrAraip pOlE


Thirukkotiyur Nambi is one of the chief disciples of Alavandhar. He was bestowed with the responsibility of teaching the meanings of rahasya thrayam – thirumanthram, dhvayam and Charama Slokam to Ramanujar. Periya Nambigal, acharya of Swami Ramanuja, told Ramanuja that Alavandar had left the task of teaching him the rahasyartthas to Thirukkotiyur Nambi and instructed Ramanuja to go to Thirukkottiyur Nambi and learn the meanings.

Ramanuja walked to Thirukkottiyur from Srirangam and sought Nambi and asked him to teach the meanings. However, Nambi refused to do so right away. He wanted to test Ramanuja and confirm that he was indeed worthy of receiving these great meanings.
Ramanuja made this trip from Srirangam to Thirukkottiyur eighteen times before Nambi was convinced. After testing Ramanuja’s faith and his eagerness in learning the truth and his strong spirit which is capable of overcoming the unsettled mind, Thirukkottiyur Nambi felt that Ramanuja deserves what it takes to know Thirumantra.

Nambi took a vow from Ramanuja ("sULuRavu") that he would not reveal the meanings to anyone and taught him the meanings of Thirumantra - once again, he took a vow from him not to teach these meanings to anyone without testing. Ramanujar, after learning this meaning from his acharya, ran immediately to the temple top and gathered people in front of the temple and shouted aloud the mantra and its meanings. Nambi, fumed with anger on knowing about Ramanujar’s act and said –“You revealed the truth to everyone, even to the undeserved souls. You also disobeyed your acharya’s words and your promise. For this act, you will go to hell. You know all this. Why did you do it?”

Ramanujar replied, “I may go to hell for disobeying your orders but as a result of this one sin of mine, many souls will be uplifted and they will attain salvation. Mankind will be saved.”  Nambi, overwhelmed in Ramanujar’s concern for mankind and huge heart in providing true spiritual help to others, he gave him a special name –Emperumaanar! 

Thirukkotiyur Nambi vowed to understand the strength of Ramanujar’s mind and Ramanujar vowed to learn from Nambi, under any circumstance. Such, their bond grew stronger, everytime, as a result of their vows.


Thirukkolur Ammal is asking, "Did I vow like Thirukkotiyur Nambi to understand Ramanujar?”

May 04, 2018

Thirukolur Penpillai Rahasyam-58



 நில் என்று பெற்றேனோ இடையாற்றூர் நம்பியைப் போலே 

இடையாற்றூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் அருகில் உள்ள இடையாற்றூக்குடி என்னும் ஊரில் வசித்து வந்த தீவிர நம்பெருமாள் பக்தர். ஸ்ரீ ரங்கத்தில் ஆண்டிற்கு நான்கு முறை பிரம்மோற்சவம் நடக்கும். ஆண்டு முழுவதும் ஸ்ரீ ரங்கத்தில் நம்பெருமாளுக்கு புறப்பாடும் உற்சவமும் நடக்கும் என்றாலும், பிரம்மோற்சவத்தின் போது ஸ்ரீ ரங்கமே அழகு கோலம் கொண்டிருக்க, நம்பெருமாள் அழகில் மயங்க அனைவரும் கூடுவர். இடையாற்றூர் நம்பியும் இதற்கு விதிவிலக்கல்ல. பிரம்மோற்சவத்தின் போது, இடையாற்றூர் நம்பி முதல் நாளே ஸ்ரீ ரங்கம் வந்துவிடுவார்.

கொடியேற்றம் முதல் அனைத்து புறப்பாடுகளிலும் கலந்து கொண்டு, ஒன்று விடாமல் சேவிப்பார். பிரம்மோற்சவம் முடிந்த பின், வீடு திரும்பினாலும், அனுதினமும் நம்பெருமாளின் அழகை எண்ணியபடியும், அடுத்த பிரம்மோற்சவம்  பற்றிய ஏக்கத்துடனும் நாட்களைக் கடத்துவார். ஒரு பிரம்மோற்சவம் விடாது, ஆண்டுதோறும் நான்கு பிரம்மோற்சவத்தின் போதும் ஸ்ரீ ரங்கம் சென்று நம்பெருமாளை சேவித்து வருவார்.

ஆண்டுகள் சென்றன. முதுமை ஆட்கொண்ட காரணத்தால், ஒரு முறை இடையாற்றூர் நம்பியால் பிரம்மோற்சவத்தின் முதல் நாள் அன்று ஸ்ரீ ரங்கம் செல்ல முடியவில்லை. முதுமையினால் அவதி கொண்டாலும், ஸ்ரீ ரங்கம் புறப்பட்டு, ஆறாம் நாளே கோவிலினை அடைந்தார். இந்நிலையில், முதல் நாள் முதல் இடையாற்றூர் நம்பியைக் காணாது நம்பெருமாள் தவித்துப் போனார். ஆறாம் நாள், தூணைப் பற்றிக்கொண்டு இடையாற்றூர் நம்பி நிற்பதைக் கண்டு பேரானந்தம் கொண்ட நம்பெருமாள், அவரிடம், “உன் வரவால் மனமகிழ்ந்தேன். என்ன வேண்டும், கேள்.”, என்றார்.
இடையாற்றூர் நம்பி, “நம்பெருமாளே! எம்பெருமானே! உன் தயவினால், இத்தனை ஆண்டுகள் உன் அழகை சேவிக்கும் பாக்கியம் கொண்டேன். முதுமை காரணமாக இவ்வுடல் பயணத்திற்கு ஒத்துழைக்கவில்லை. இதுவே கடைசியோ என்று மனம் பதறுகிறது.”, என்றார், இருகரம் கூப்பி.

நம்பெருமாள், உடனே, “என்றால், இனி, இங்கேயே நில்லும். அனுதினமும் எம்மை சேவித்துக்கொண்டு இரும்.”, என்று கூறி செல்ல, நம்பெருமாள் உற்சவம் முடியும் வேளை, இடையாற்றூர் நம்பியின் உடல் பிரிந்து உயிர் செல்ல, மோக்க்ஷம் அடைந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “இடையாற்றூர் நம்பி போல் அனுதினமும் நம்பெருமாளை எண்ணினேனோ, இல்லை, இடையாற்றூர் நம்பி போல், நம்பெருமாளால், “இங்கேயே எம்முடன் நில்”, என்று அன்புடன் தான் கூறப்பெற்றேனோ”, என்று வினவுகிறார்.

========********========


nil enRu peRREnO idaiyARRUr nambiyaip pOlE

Though at Sri Rangam Temple the utsavams will take place throughout the year, of all the festivals, the Lord enjoys four Brahmotsavam each year. It is still the prime festival for the Lord.

Ages back, there lived an ardent devotee named Idaiyarrur Nambi in Idaiyatrukudi. He would attend every Brahmotsavam from the first day and will stay there and enjoy the pleasures of the Lord till the last day of the festival. As soon as he returned home, he would be thinking of nothing but only the festival and the Lord. All he will do is, think about the Lord and wait for the next Brahmotsavam. This repeated every year.

Years passed by and due to old age, he lost his strength. One time, when he started for the Brahmotsavam, he was unable to reach Sri Rangam on the first day. Still, he tried all his best and gathered strength to reach Sri Rangam and see the lord, at any cost. Meanwhile, seeing that His devotee is not there on day one, Namperumal (the Lord of Sri Rangam) wondered "Idaiyatru Nambi has not made it to the first day of our utsavam".

Idayatru Nambi was able to be there and see the Lord only on the sixth day. Seeing him on the sixth day, Namperumal became very happy and told him "I would like to give you a boon. Ask me whatever you need." Nambi spoke gently, "Through the body You gave me, I worshipped for these many years. Now that old age has come, this body is no longer capable of travel.” Namperumal replied "If that’s so, from now on, stay here itself." (Just like he told Sri Ramanuja to stay at Srirangam - "atraiva srIrange sukhamAsva").

As Namperumal reached the next street in procession, Nambi left this world and reached His divine abode.


Thirukkolur Ammal is asking "Did I worship the Lord and think about nothing else like Idaiyarrur Nambi did and was told by Namperumal to stay at His place?"




February 08, 2018

Thirukolur Penpillai Rahasyam-31




குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

அனந்தாழ்வான், ஆதிசேஷனின் பெயர். ஆதிசேஷன்,பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். 

கீதையில் கிருஷ்ணா பகவான் 10 அத்தியாயம் 29 ஸ்லோகத்தில் "ஆனந்தாஸ் க அஸ்மி நாகானாம்" என்று, அதாவது “நான் நாகர்களில் நான் அனந்தன் “ என்றார்.

பொய்கை ஆழ்வார், தனது முதல் திருவந்தாதியில்,
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
 
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
 
அணையாம் திருமாற்கு அரவு

திருமால் நடந்து சென்றால் குடையாகவும், அமர்ந்து இருந்தால் அரியணையாகவும், நிற்கும்போது காலணியாகவும் (பாதுகை), என திருமாலின் அனைத்து செயல்பாடுகளில் துணையாக நிற்கிறார்  ஆதிசேன். கடலில் மிதப்பதற்குத் தெப்பமாகவும்,விளக்காகவும் (ஒளி) ஆடையாகவும், படுக்கையாகவும்  விளங்குகிறார் ஆதிசேஷன்!

திருக்கோளூர் அம்மாள், “ஆதிசேஷன் போல் திருமாலுக்கு ஏதேனும் கைங்கரியம் செய்தேனா?”, என்று வினவுகிறார்.

========********========

Chennakeshava Temple, Karnataka,India

kudai mudhalAnadhu AnEnO ananthAzhvAn pOlE

Ananthazhwan is the name for Adisesha on whom the Lord rests. Adisesha is the nagaraja, King of the serpents. Adisesha is said to hold all the planets of the universe on his hoods and also constantly sings the glories of the God Vishnu from all his mouths. He is sometimes referred to as Ananta Sesha, which translates as endless-Sesha or Adisesha "first Shesha". It is said that when Adisesha uncoils, time moves forward and creation takes place; when he coils back, the universe ceases to exist.

Ananthazhwan floats coiled on the ocean of bliss, to form the bed for Lord Vishnu. In the Bhagavad-Gita of Chapter 10, verse 29, Lord Krishna, while describing 75 of his common manifestations, declares, "anantaś ca asmi nāgānā:”, meaning, “Of the nagas, I am Ananta.”

He is always with the Lord! Even when the Lord descends to this world, Adisesha accompanies Him in some form and do services to his Lord. He is in eternal service and hence, is the personification of service.

Poigai Azhwar sings in his Mudhal Thiruvandhadhi about Adisesha as:

senRAL kudaiyAm irundhAl singAsanamAm
ninRAl maravadiyAm nILkadluL enRum
puNaiyAm maNi viLakkAm pUmpattAm pulgum
aNaiyAm thirumARku aravu

Meaning, Ananthazhwan is an umbrella when the Lord walks; he is a seat when He sits; he is the footwear/sandals when He stands up; he is the float when He is in the milky ocean; he is a lamp; he is a cloth and he is a pillow!! Thus he is everything when it comes to rendering service.


Thirukkolur Ammal is asking "Have I rendered any kind of service to the Lord, like Adisesha?"



February 03, 2018

Thirukolur Penpillai Rahasyam-26



அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

ஸ்ரீ கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர் குசேலன் (சுதாமா). கிருஷ்ணரோடு வேத பாடசாலையில் படித்தபோதே, வேத வாக்கியங்கள் பிரம்மத்தை அறிந்து கொள் என்றால் சுதாமா கிருஷ்ணரை பார்ப்பார். அவரது குடும்பம் வறுமையில் இருந்தாலும், ஞானம் எனும் மாபெரும் நிதி இருந்ததால் நிறைவாகவும், நிரம்பியவராகவும் இருந்தார். அழுக்கு வஸ்திரங்களை உடுத்தியிருப்பதால் ஊரிலுள்ளோர் குசேலர் என்று அழைத்தனர். அவர் பத்தினி, சுசீலையை சுட்சாமா என்று கூப்பிட்டனர். அதாவது, ஒட்டிய வயிற்றை உடையவள் என்று பொருள்.

நாட்கள் சென்றன. வருடங்கள் பல ஆகின. ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் ஆட்சி புரிந்து கொண்டிருக்க, சுதாமரோ வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். வறுமையினால் பிள்ளைகள் பசியால் வாடுவதைக் கண்ட சுசீலை, ஒரு நாள், சுதாமரிடம் - "உங்கள் நண்பர் ஸ்ரீ கிருஷ்ணன் இப்போது துவாரகையின் மன்னனாய் உள்ளார். அவரிடம் சென்று உதவி வேண்டினால், நம் வறுமை நிலை மாறும் அல்லவா?" - என்றார்.

சுசீலையின் வார்த்தைகளில் சுதாமருக்கு உடன்பாடில்லையென்றாலும், இக்காரணம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனைக் காண ஒரு வழி கிடைத்ததாய் எண்ணி ஒப்புக்கொண்டார். சுசீலை குடிலில் இருந்த சிறிதளவு அவல் பொரியை சுதாமரிடம் தந்து வழியனுப்பி வைக்க, சுதாமரும், ஸ்ரீ கிருஷ்ணனை இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கப் போவதை எண்ணியவாறே துவாரகை நோக்கி பயணித்தார்.

பல வருடங்கள் கழித்து தன்னை காண வந்த நண்பனை, மாளிகை வாசலில் நிற்கும் சுதாமாவைக் காண, துவாரகையின் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணன் துள்ளிக் குதித்து ஓடி வருவதை கண்களில் கண்ணீருடன் சுதாமா கண்டார்.  ஸ்ரீ கிருஷ்ணனின் தங்க இருக்கையில் சுதாமரை அமர வைத்து, கிருஷ்ணனே பாதபூஜை செய்ய, ருக்மிணி சாமரம் வீச, சத்யபாமா பல வகை இனிப்பு, பலகாரம் மற்றும் பழ வகைகளை சுதாமருக்கு தங்க தட்டில் வைத்து பரிமாறினார். தங்களின் சிறு வயது குறும்புகளை, கிருஷ்ணனின் லீலைகளை, சுதாமரின் தன்னலமற்ற அன்பினைப் பற்றிய சம்பவங்களை நினைவு கூர்ந்தும் இருவரும் நேரம் போவது தெரியா வண்ணம் உரையாடினர்.

கிருஷ்ணனின் ஆடம்பர மாளிகை, ஆபரணம், பட்டு உடைகள், தங்கத்தட்டில் உணவு என எல்லாவற்றையும் கண்ட சுதாமருக்கு, சுசீலை கொடுத்தனுப்பிய அவல் பொரியை கிருஷ்ணனுக்கு கொடுக்க சங்கோசம் கொண்டு மறைத்தே வைத்திருந்தார். சுதாமரின் எண்ணங்களை அறிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், "சுதாமா! எனக்காக என்ன கொண்டு வந்தாய் உன் வீட்டில் இருந்து?"-என்று மீண்டும் மீண்டும் கேட்டு, சுதாமரிடம் இருந்து அவல் பொரியை பெற்றுக்கொண்டார். இரு கை அளவே கொண்ட அவல் பொரியை பெற்றுக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், அதில் சிறிதளவு உண்டு - "கோகுலத்தின் வெண்ணையை விட ருசியுள்ளதாய் உள்ளது"- என்றார், கண்களில் நட்புடனும் அன்புடனும். கிருஷ்ணனின் சிறு பிள்ளைப் போன்ற சிரிப்பினையும், குறும்பையும் கண்டு மகிழ்ந்த சுதாமர், அன்றிரவுப்பொழுதை கிருஷ்ணனுடன் களித்தார்.

பொழுது புலர, மறுநாள், சுதாமா ஸ்ரீ கிருஷ்ணனிடம் இருந்து ஏதும் வேண்டாமலே, மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் விடைப் பெற்றுக்கொண்டார். இல்லம் நெருங்கும் போது, வெறுங்கையுடன் செல்வதைக் கண்டு சுசீலை என்ன கூறுவாளோ என்றெண்ணியவாறே தயக்கத்துடன் சென்றார். தெரு முனையில் திரும்பும் பொழுது, தயக்கத்துடன் நிமிர்ந்த சுதாமர், தன் குடில் இருந்த இடத்தில் மாட மாளிகை இருப்பதையும், தன் பிள்ளைகள் பட்டாடை அணிந்து தெருவில் விளையாடுவதையும் கண்டு ஆச்சர்யம் கொண்டார். இவை அனைத்தும் கிருஷ்ணனின் லீலையே என்பதை அறிந்து கொண்ட சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணனின் தூய நட்பினையும், இணையில்லா அன்புள்ளத்தையும் தினம் எண்ணியவாறு பல நற்காரியங்கள் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.

திருக்கோளூர் அம்மாள், "சுதாமரைப் போல், அன்பு மட்டுமே உள்ளத்தில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனை மட்டுமே கருத்தில் கொண்டு அவல்பொரியை ஈந்தேனோ?", என்று வினவுகிறார்.

========********========


aval poriyai IndhEnO kusElaraip pOlE

Sudhama, also known as Kusela, was a Brahmin childhood friend Lord Krishna from Mathura. He was born as a poor man in order to enjoy the transcendental pastimes. The bonding between Krishna and Kushela is said to be a story on how friendship should be! Sri Krishna learned all the arts from Rishi Santhipini. His fellow student at that time was Kushela, who had great knowledge and knew the truth about Krishna. After the end of their studies, Kushela went back home and married Suseelai and lived with her. He continued to be poor and survived on alms.

One day, when the family was in extreme poverty, Suseelai approached Kushela and told him "We are not able to feed the kids even for one time in a day! They are growing weak and also, there’s no food for us. Your childhood friend Krishna is now king of Dwaraka. Go see Him. He will help us get rid of our poverty".

Kushela did not want to ask Krishna for anything but he agreed to go to Him, because it would be an opportunity to meet Him again. He did not want to go empty handed though. So, Suseelai gave some aval (fluffed rice) to Kusela, on the advice of Kusela who knows that his friend loves fluffed rice.

When he reached the palace, the royal gatekeepers did not allow him inside as he was dressed in rags. When Sri Krishna was informed about Kusela’s arrival, he rushed to the gate and welcomed Kusela with utmost love and respect. .

Kusela was seated in Krishna’s throne and Krishna had Rukmini fan him while Krishna was washing Kusela’s feet with water. They both shared their memories from the past and even shared it with Rukmini and Bama. Kusela, looking at the grandeur way Krishna is living his life and the food they have prepared for him, he was ashamed to give Him the small amount of aval that he had brought and so he hid it in his rags itself.

While he was about to leave, sensing Kusela’s heart, Sri Krishna asked Kusela whether he came to see his friend empty- handed. He asked Kushela what he had brought for Him to eat. Knowing that Krishna would not leave him until he gives the hidden fluffed rice; Kusela gave the aval to Him. With great pleasure and claiming that it was dearer to Him than the butter in Gokulam, He ate a handful of the aval. Watching Sri Krishna being the same from childhood, Kusela was delighted and at the same time, was too embarrassed to ask Sri Krishna for anything and left the palace empty handed.

But Kusela did not realize that as soon as Krishna ate his fluffed rice, His full grace had fallen on Kushela. It is said that Rukmini stopped Him from eating any more of the aval. Only on his return to his home, he found that his hut has become a palace and that his family had received great wealth. He continued to live a simple life while praising His greatness.


Thirukkolur Ammal is asking "Did I take aval with great affection to the Lord like Kushela did?"

February 02, 2018

Thirukolur Penpillai Rahasyam-25



அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
இராவணனால் கடத்தப்பட்டு, இலங்கையில் சிறையில் வாடும் சீதாதேவியை மீட்டு வர, இலங்கைக்கு கற்கள் கொண்டு குரங்குகள் பாலம் அமைக்க, வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ இராமனைக் கண்ட அணில்கள், ராமனுக்கு உதவி புரிய முன்வந்தன.

கடலில் குதித்த அணில்கள், நனைந்த உடலுடன் கடற்கரையில் உருண்டன. உடலில் ஒட்டிய சிறு மணலுடன் ஓடிய அணில்கள், பாலத்திற்கு சென்று, குரங்குகள் அடுக்கிய பாறைகளின் இடுக்கில் அம்மணல் துகள்கள் விழுமாறு உடலை உலுக்கினர்.

அணில்களின் இச்செயலை கிண்டல் செய்த குரங்குகளிடம், ஒரு அணில் – “உங்களைப் போல் பெரிய உடலும் வலிமையும் என்னிடம் இல்லை. அதனால் என்னால் இயன்றதை நான் செய்கிறேன். இதற்காக நாங்கள் இக்கடலே வற்றிப்போகும் அளவிற்கு கடலில் குதிக்க வேண்டும் என்றாலும், நாங்கள் அதையும் செய்ய தயாராகவும் உறுதியாகவும் உள்ளோம். “ராமா” என்னும் ஒரு சொல் எங்களுக்கு அந்த வலிமையை தரும்.”, என்றது.

அணிலின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீராமர், மனம் நெகிழ்ந்து, அணிலை தன் கையில் ஏந்தி, “ எதையும் எதிர் பார்க்காமல், உதவி புரிய வந்துள்ளீர்! உனது கூட்டத்தாரின் பெரும்உதவிக்கு மிக்க நன்றி. உன் செயலாலும், வார்த்தைகளாலும் என் மனம் மகிழ்ந்துள்ளது.”-என்றார். அணில்களின் இச்செயலினை பாராட்டி அவர் அதன் முதுகில் பரிவுடன் தடவ, அவரின் மூன்று விரல் அணில்களின் முதுகில் கோடு போட்டன. இதனாலேயே அன்று முதல் அணில்கள் முதுகில் கோடு உள்ளது.

            அணில்களின் இச்செயலை, தொண்டரடிப்பொடியாழ்வார், தன் பாசுரத்தில் :
                        குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
                        தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
                        மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
                        அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.
            -என்றார்.

குரங்குகள் மலையை தள்ளி பாலம் அமைக்க, அணில்கள், கடலில் புரண்டு, கடலை வறண்டு போக செய்ய எண்ணியும், மணலைக் கொண்டு பாலம் உறுதியாக இருக்க உதவியும் செய்து ஸ்ரீ இராமனுக்கு தங்களால் இயன்ற வழியில் உதவி புரிந்தன. எந்த ஒரு பலனையும் எதிர் பார்க்காமல், தனது சிறு உடலினைக் கொண்டு, தன்னால் இயன்ற வழியில் உதவி புரிகின்றன! நானோ இங்கு மரத்தைப் போல் வலிய நெஞ்சினைக் கொண்டு இறைவனுக்கு எவ்வுதவியும் புரியாமல், எதிர் பார்த்து மட்டுமே நின்று கொண்டிருக்கின்றேனே!

திருக்கோளூர் அம்மாள், "அணில்களைப் போல், குரங்கின் பின் சென்று, ஸ்ரீ ராமனுக்கு பக்தியுடன் சேவை புரிந்தேனோ?", என்று வினவுகிறார்.


========********========



anuyAththiram seydhEnO aNilangaLaip pOlE

In the great Indian epic, Ramayan, after Sita was abducted by Ravana, Lord Rama and Lakshmana assembled the army of monkeys with the help of King Sugriva. In order to cross the ocean, they decided to build a bridge and on the command of Sri Rama, the monkeys started working immediately, without wasting any time, and started collecting stone and boulders from the mountains. Thousands and thousands of monkeys started working day and night, to collect, cut and assemble the rocks and make sure the bridge is ready as early as possible. Even Lord Rama was amazed and pleased at the way the monkeys are working and helping him.

One day, while he was watching the work going on, he noticed squirrels doing something unusual. Noticing the squirrels, he went close to them and tried to see what they were trying to do. When he was nearing the squirrels, he heard the conversation between a monkey and a squirrel.

A monkey that was carrying a heavy stone on his back was about to step on a squirrel that came in his path and realizing it, before stepping on it, the monkey jumped back by dropping the stone. Apologizing for the act, the squirrel replied – “Please look always before placing your steps for we are small and busy running to help Lord Rama!”

Amazed at the squirrel’s words, the monkeys started laughing. Without any response to the laughs of the monkey, the squirrel said – “Look, I’m not big enough to carry rocks and boulders like you all. But we do want to help. God gave me only a little strength. I can only carry pebbles. So, while few of us are carrying pebbles, the rest of us, we jump into the ocean and make our bodies wet; come back to the beach and roll in the sand. Then we go to the boulders and shake the sand from our bodies in the gaps between the rocks you place. Even it means we have to drain the ocean by making our bodies wet and help build the bridge stand strong for the army to cross over, get Sita safe and return safely, we are ready to even do that with the little body and strength we have. Crying out aloud “Rama”, will give us all the strength we need to even drain this ocean with our tiny little body.”

Listening to the words of the squirrel, Lord Rama was impressed and he came close to them. Holding the squirrel in his hand safely, Lord Rama said to the monkeys – “Oh, I really admire your help. But, do not make fun of the weak and the small. Your strength or what you do is not important. What matters are your love and a heart without expecting anything in return for the help you do. This little squirrel has love in his heart. These tiny pebbles and stones and sand that are brought by these little squirrels are the ones that are filling the gaps between the huge boulders and rocks you add to the bridge and they are binding the bridge to stand strong!

Turning to the squirrel, Lord Rama said softly, “My dear squirrel, I apologize on behalf of my army, and thank you for your timely help. Please go and continue your work happily.” Saying this, he gently stroked the back of the squirrel with his fingers, and three lines appeared where the Lord’s fingers had touched it.

Thondaradippodi Azhwar celebrated their service by the squirrels to the Lord in his Thirumaalai pasuram:

kurangugaL malaiyai nUkkak kuLiththuth thAm puraNdittOdith
tharanga nIradaikkaluRRa salamilA aNilum pOlEn
marangaL poL valiya nenjam vanjanEn nenju thannAl
aranganArkkAtcheyyAdhE aLiyaththEn ayarkkinREnE

“The squirrels thought “when the Lord is very anxious to retrieve Sita Piratti, these monkeys are blocking the ocean very slowly. Moreover, they do not have the strength to block the ocean. It is clear that they do not have sufficient manpower to fill the gaps between the mountains with sand. Only because of this, they are not carrying sand to fill the gap between the mountains”. In order to overcome this deficit, the squirrels entered the waters to wet their bodies, without expecting any benefit out of their work. Look at me… I’m standing here without any involvement, with my mind hard like a tree. Instead of doing service to the Lord, I stand here making myself not useful and even making the lord wonder whether my heart is stone or liquid!”

Thirukkolur Ammal is asking "Did I do divine service to the Lord like the squirrels?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...